தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் விக்னேஷ் சிவன் இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல்" என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். மேலும் இவர் நடிகை நயன்தாராவை ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.சில மாதங்களுக்கு முன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன், சென்னை விமான நிலையத்தில் இருமுடி கட்டி உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
ரசிகர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில் "குழந்தைகள் எப்படி இருக்காங்க?" என்று ரசிகர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்க, "குழந்தைகள் நல்லா இருக்காங்க" என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார். விக்னேஷ் சிவன் உடன் நடிகர் ஜெயராமும் சபரிமலை செல்கிறார்.
Listen News!