தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் விக்னேஷ் சிவன். முதல் படமே பல சர்ச்சைகளில் சிக்கியது. இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நானும் ரௌடிதான் திரைப்படம் தான்.
விஜய் சேதுபதி மற்றும் நன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் விக்னேஷ் சிவனுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.அந்தப் படத்தின் வெற்றி விக்னேஷ் சிவன் மீது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்திற்கு பிறகு தான் நயன் மீது காதலும் பிறந்தது. அந்த வகையில் மிகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன்.
தொடர்ந்து பல படங்களை இயக்கி வந்த இவர் அடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அந்த செய்தி வெளியானதில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களும் மகிழ்ச்சிகளையும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கூறிவந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் அஜித்தின் துணிவு பட வெற்றி தான்.
ஆனால் சில பல பிரச்சினைகளால் விக்னேஷ் சிவன் படத்தை இயக்க முடியாமல் போனது. அந்த நேரம் விக்னேஷ் சிவன் கடும் அப்செட்டில் இருந்தார்.ஆனால் அதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்தார். இருந்தாலும் விக்னேஷ் சிவன் மீது ஒருவித நெகடிவ் எண்ணங்கள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் வந்தன என விக்னேஷ் சிவன் நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
அதாவது ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் எப்படி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதோ அதே மாதிரியான ஒரு நிகழ்ச்சியைத்தான் விக்னேஷ் சிவனும் தொகுத்து வழங்கப் போகிறாராம். இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது இன்னும் பேரதிர்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!