நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு.இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் முறையே 11 மற்றும் 14ம் தேதிகளில் ரிலீசாகவுள்ளது. குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தை வம்சி இயக்கி வருகின்றார்.
காமெடி, ஆக்ஷன் போன்ற அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.இந்நிலையில் வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங்கும் துவங்கப்பட்டு, விற்றுத் தீர்ந்துள்ளன. படத்தின் ப்ரமோஷனும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து தற்போது நடிகை குஷ்பூ பேசியுள்ளார். வாரிசு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அனைத்து நடிகர்களும் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது.இந்த காம்பினேஷன் காட்சியில் விஜய் கண்டிப்பாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு அந்த நேரத்தில் கடுமையான ஜூரம் இருந்ததாகவும் 103 டிகிரியில் அவருக்கு ஜுரம் காணப்பட்டதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சூட்டிங்கிற்கு வந்த விஜய், அருகிலிருந்த கேரேஜில் போய் தூங்கிவிட்டு, தன்னுடைய காட்சி படமாக்கப்பட்டபோது வந்து நடித்திருந்தார். இந்தக் காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தநாள் தன்னுடைய சிகிச்சைக்காக மருத்துவமனையில் விஜய் அட்மிட் ஆனதையும் குஷ்பூ தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
நடிப்பை மிகவும் நேசிப்பவர் நடிகர் விஜய். இதுபோல தன்னுடைய நடிப்பில் மிகவும் டெடிகேஷனாக செயல்பட்டு வருவதால்தான் விஜய் ரசிகர்களின் பேவரைட்டாக தொடர்ந்து இருக்க முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
Listen News!