• Sep 20 2024

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ரி கொடுக்கவுள்ள விஜய் ,அஜித் பட நடிகை -யார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2021ஆகஸ்ட் 23 முதல் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிகர் ஆனந்த் செல்வன், பணக்கார குடும்பத்தில் பிறந்தவராக சித்தார்த் என்ற கேரக்டரில் தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பி வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி ஷர்மா, பொம்மி என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.

மேலும் ஜீ தமிழின் பல சீரியல்கள் டீ.ஆர்.பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகின்றன. மக்களின் மனதில் தனி இடம் பிடித்த அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது நினைத்தாலே இனிக்கும். குறுகிய காலகட்டத்தில் மக்களின் மனதை கவர்ந்த சீரியல் தான் நினைத்தாலே இனிக்கும் .

இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலில் புதிதாக ஒரு பிரபலம் இணைய உள்ளார். அது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்துள்ளார் சீரியல் நாயகன் நடிகர் ஆனந்த் செல்வன்.

மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிற்கும் சிட்டுக்குருவி பாட்டி தான் தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியலில் புதிதாக இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் பாட்டியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் இந்த சிட்டுக்குருவி பாட்டி. இவரது இயற்பெயர் சீனியம்மா. மெர்சல் படத்தில் சிட்டுக்குருவி என்ற கேரக்டரில் நடித்ததால் அதன் பிறகு இவரை எல்லோரும் சிட்டுக்குருவி பாட்டி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

மேலும் காதில் பெரிய தொங்கட்டான், 2 மூக்கிலுமே மூக்குத்தி, கண்டாங்கி புடவையுடன் என தோற்றமளிக்கும் சிட்டு குருவி பாட்டி ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து உள்ளார். முன்பு விழா ஒன்றில் பேசிய இவர், தள்ளாத வயதானாலும் யார் உதவியையும் எதிர்பார்க்காமல் உழைத்து சாப்பிட வேண்டுமென்று நினைப்பதால் சினிமாவில் நடித்து வருவதாக கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.

இதனிடையே நடிகர் ஆனந்த் செல்வன் "நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சிட்டுக்குருவி பாட்டி" என்று டைட்டில் கொடுத்து அவருடன் தான் எடுத்து கொண்டுள்ள புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்து உள்ளார். இதனை அடுத்து சிட்டுக்குருவி பாட்டியின் இயல்பான நடிப்பை பார்க்க சீரியல் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்களாம்.

Advertisement

Advertisement