தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் ஏ. ஆர் முருகதாஸ்.இவர் 1947 என்னும் படத்தை தயாரித்து வருகின்றார். பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வந்த இவரின் மார்க்கெட் தற்பொழுது சரிவடைந்து விட்டது எனலாம்.
அந்த வகையில் இவர் இறுதியாக மகேஷ்பாபு இயக்கத்தில் ஸ்பைடர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக யாருடைய படத்தை இயக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்கப் போகின்றார்.
இந்த நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் விஜய் மற்றும் அஜித் இருவரையும் ஒன்றாக இணைத்து படம் இயக்கப் போவதாகவும் அப்படத்திற்கான கதையும் ரெடி என பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து அண்மையில் ஓர் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய முருகதாஸ் விஜய், அஜித் இரண்டு பேருமே இப்போ ரொம்ப உயரத்திற்கு வளர்ந்திட்டாங்க.இருவரையும் சேர்த்து படம் எடுக்கும் போது இருவருக்கும் ஒரே அளவான ஸகோப் படத்தில் இருக்கனும். அதனால இப்போ இரண்டு பேரையும் வச்சு எடுப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம்.
அத்தோடு அவங்களுக்காக எழுத்திய கதை இந்த காலத்திற்கு செட்டாகுமா என்று கேட்டால் அதை உறுதியாக சொல்ல முடியாது.அந்த கதையை படிச்சுப் பார்த்திட்டு தான் முடிவு பண்ண முடியும் வேற இரண்டு ஹீரோக்களை வைத்து பண்ணுவதா இல்லையா என்று முடிவு பண்ண வேணடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!