சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகி நல்ல விமர்சனகளை பெற்று வருகிறது.
இந்த படத்தில், தமன்னா , ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயக், மிர்னா மேனன் மற்றும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களில் 340 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசூல் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காட்சிகளின்மூலம் ரஜினிக்குள் இருக்கும் நடிகனையும் ரசிகர்கள் உணர முடிகிறது. ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. காவாலா பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை தாண்டி பட்டையை கிளப்பி வருகிறது.
இந்தப் படத்தின் வெற்றியால் தற்போது நெல்சன் உற்சாகமடைந்துள்ளார். அடுத்ததாக அவர் எந்த நடிகருடன் இணைவார் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், ஜெயிலர் 2 படத்தை இயக்கும் ஆசை தனக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெயிலர் மட்டுமின்றி, தான் இயக்கிய மற்ற படங்களின் இரண்டாவது பாகங்களை இயக்கும் எண்ணமும் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரும் மாஸ் ஸ்டார்கள் என்றும் இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாகவும் சரியான நேரம் அமைந்தால், தனது இந்த விருப்பம் நிறைவேறும் என்றும் கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.அத்துடன் விஜய்,ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Listen News!