பாலிவூட் நடிகர் அட்லி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிகழ்ச்சியில் பேசிய அட்லி, "ஜவான் உருவாக விஜய் அண்ணா தான் காரணம். அவர் கொடுத்த தன்னம்பிக்கையால் தான் இந்தப் படத்தை இயக்கினேன்" எனக் கூறினார். மேலும், "13 ஆண்டுகளுக்கு முன்னர் எந்திரன் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த போது, ஷாருக்கான் சார் வீட்டின் முன்பு நின்று போட்டோ எடுத்தேன்.
ஆனால், இப்போது அவரை வைத்து படம் இயக்கியதோடு, ஒன்றாக ஒரே காரில் பயணித்துள்ளேன்" என நெகிழ்ச்சியாக பேசினார். ஜவான் பேச்சுவார்த்த நடந்துகொண்டிருக்கும் போது, யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என ஷாருக்கான் கேட்டார். அப்போது எனக்கு என் டார்லிங் நயன்தாரா தான் நினைவில் வந்தார்.
அதனை அப்படியே ஷாருக்கான் சாரிடம் சொன்னதும், அவரும் ஓகே சொல்லிவிட்டதாக அட்லி கூறியுள்ளார். அதேபோல், நம்மை சுற்றி நிறைய நெகட்டிவிட்டி வரும், ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினால் போதும், வெற்றி தானாக வந்து சேரும் என தலைவர் ஸ்டைலில் பஞ்ச் வைத்து மாஸ் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!