விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரை மாய்த்துக் கொண்டது, திரையுலகினரை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மக்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் மன அழுத்தத்தால் இப்படி செய்து கொண்டார் என்பது அனைவரையும் தீராத துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
12ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனி மகள் கடந்த ஓராண்டாக சோர்வுடன் காணப்பட்டதால், அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டின், மின் விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, உடலை போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனையின் பின்னர் மீராவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது
இதனை அடுத்து இன்றைய தினம் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.மேலும் மீராவின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது வருத்தமாக இருக்கிறது என பதிவு போட்டார்.
அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் இப்போது விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார் என கேட்க, அதற்கு அவர் பல மணி நேரமாக அவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவர் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை என டுவிட் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!