தமிழ் சினிமாவில் நடிப்புத் துறையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த ஒருவரே விஜய் ஆன்டனி. ஆரம்பத்தில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு தான் நடிகர், பட தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுள்ள ஒருவராக மாறினார்.
இருப்பினும் விஜய் ஆன்டனி தற்போது தீவிரமாக நடிப்பில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்தவகையில் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை விட, ஒவ்வொரு படத்திற்கும் தன் வித்தியாசமான நடிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தி வரும் திறமை கொண்ட ஒருவராகவும் விளங்கி வருகின்றார்.
அந்தவகையில் இவர் நடிப்பில் வெளியான' திமிர் பிடித்தவன்', 'கொலைகாரன்', 'பிச்சைக்காரன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து தற்போது இவர் 'பிச்சைக்காரன் 2', கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் போன்ற அடுத்தடுத்த படங்களில், மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விஜய் ஆன்டனி மற்றும் இவருக்கு ஜோடியாக இணைந்து நடித்து வந்த நடிகை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம், கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஏற்கெனவே தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து விஜய் ஆன்டனி தற்போது நன்றாக இருக்கிறார் என்றும், அவர் முகத்தில் மட்டுமே பலத்தை காயங்கள் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது பழையபடி முகத்தை சரி செய்துகொள்ள விஜய் ஆன்டனி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக இவர் விரைவில் ஜெர்மனி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விஜய் ஆன்டனி கூடிய சீக்கிரமே முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் கடவுளை வேண்டி வருகிறார்கள்.
Listen News!