• Sep 20 2024

இறுதியாக விஜய் ஆண்டனி மகள் மீரா மெசேஜ் அனுப்பியது இந்த 2பேருக்கும் தானா..? அம்பலமான உண்மை..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் பிரிவு அவர்களின் குடும்பத்திற்கு பெரும் சோகமான ஒரு விடயம். மேலும் விஜய் ஆண்டனியை நினைத்து தான் இப்போது தமிழக மக்கள் வருத்தம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் மீராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகின்றனர் அந்தவகையில் அவர் இறுதியாக பேசிய நபர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. 


அதாவது நேற்று (செப்டம்பர் 19) விஜய் ஆண்டனியின் மகள் மீரா அதிகாலை 3 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் நீண்ட நேரம் கதவை திறக்காததால் பதறிப்போய் அவரது அறை சென்று பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். பெற்றோர்கள் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.


மீரா 12ம் வகுப்பு படித்துவரும் ஒரு சிறுமி, அவருக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது அனைவருக்குமே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீரா இறுதியாக யாரிடம் பேசினார் என்பது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது அவர் வாட்ஸாப்பில் 2 மனநல மருத்துவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக விசாரணையில் வெளிவந்துள்ளது. அவரது சிகிச்சைக்கு மருத்துவர்கள் நேரம் ஒதுக்கிய நிலையில் முன்கூட்டியே சந்திக்க முடியுமா என வாட்ஸ்அப் மெசேஜில் கேட்டதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement