விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்றைய தினம் அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களையும் திரையுலகினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இவரின் இறப்பினைத் தொடர்ந்து ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.
யார் வந்து எவ்வளவு ஆறுதல் கூறினாலும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு இது ஒரு தாங்க முடியாத வலி என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இவரின் இறுதி சடங்குகள் முடிந்து பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்துள்ளனர்.
அந்த சமயத்தில் விஜய் ஆண்டனியின் மனைவி தனது மகளிடம் "கருவறையில் உன்னை சுமந்தேன்.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்" எனக் கூறிக் கதறி அழுத்திருக்கின்றார். இதனைப் பார்த்த பலரும் தமது சொந்த மகளையே இழந்திருப்பது போல் உணர்ந்து கண்ணீர் சிந்தியுள்ளனர்.
Listen News!