மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஜய் பாபு.
இவர் "ஹோம், ஆடு, திருச்சூர் பூரம்" போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
நடிகர் விஜய் பாபு மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் " சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" என துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை அளித்திருந்தார்.
இந்நிலையில் அந்த நடிகை தற்போது அவர் மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது "விஜய் பாபுவின் நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறினார். நான் முடியாது என்று மறுத்தேன். உடனே எனக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறினார்கள். எனினும் நான் அவரிடம் முடியவே முடியாது என உறுதியாக சொல்லிவிட்டேன். உடனே அவர் போனை வைத்து விட்டார்" எனக் கூறியிருந்தார் அந்த நடிகை.
நடிகர் விஜய் பாபுவின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு மலையாள திரையுலகில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- தாயாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்
- பருந்தாகுது ஊர்க்குருவி என்னும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
- தூள் பட வில்லி சொர்ணாக்கா தனது கடைசிக் காலத்தில் இப்படித் தான் வாழ்ந்தாரா?
- நேற்று ஐரோப்பா ,இன்று பெல்ஜியம்- ஜாலியாக ஊர் சுற்றி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சூழல் வெப் தொடரின் திரைவிமர்சனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!