ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
மேலும் இவருடைய நேயர்கள் இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் 2007 ஆம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாசி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.
இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் சாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது.
ரஜினியின் இந்த மாபெரும் தோல்வியை, நடிகர் விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதாக சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், இது உண்மையா? இல்லை வெறும் வதந்தி தானா என்பது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ரஜினியின் தோல்விக்கு விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியது முற்றிலுமாக பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.
மேலும், விஜய் ஒரு ரஜினி ரசிகர் என்பதையும், இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இதன்முலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Listen News!