தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா. இவருக்கு தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியாகிய அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
இவரது நடிப்பில் தற்பொழுது லிகர் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சமந்தாவுடன் இணைந்து காதல் ஜானரில் உருவாகி வரும் குஷி படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, எனக்கு குடிப்பழக்கம் இருக்கின்றது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்துவிட்டு வந்தேன். காலையில் படபிடிப்புக்கு செல்ல வேண்டும். போதை குறையாமல் எழுந்து படப்பிடிப்பிற்குச் சென்றேன்.
படத்தின் கதாபாத்திரத்திற்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிகமானது. வசனம் சொல்ல வேண்டும் என்பதை மறந்து உலர ஆரம்பித்தேன். பைத்தியக்காரன் போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழி இல்லாமல் படபிடிப்பை ரத்து செய்து விட்டார்கள் என கூறியுள்ளார் . இந்த தகவல் இவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அப்போ இனிமேல் தமிழில் நடிக்க மாட்டாரா?- சமந்தா எடுத்த திடீர் முடிவால் கடும் சோகத்தில் அவரது ரசிகர்கள்
- 16 வருடங்களுக்கு பிறகு முக்கிய அவதாரம் எடுக்கும் சிம்பு- மீண்டும் காதல் தானா?
- வெற்றிக் கொண்டாட்டத்தில் ராஜா ராணி சீரியல் குழுவினர்- அடடே இதை ஆல்யா மிஸ் செய்திட்டாரே
- அரச மரியாதையுடன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது- குஷியில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!