விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை மிருணாள் தாகூர் இணையும் படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பித்தது.
’சீதாராமம்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமாகி தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
மேலும், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் VD13 திரைப்படம் உருவாக இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான லிகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக தெலுங்கில் உருவாகி வரும் குஷி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!