• Sep 20 2024

முத்தத்தில் ஆரம்பித்து குளியலறை வரை... எல்லை மீறும் விஜய் டீவி.. முகம் சுளிக்கும் குடும்ப பெண்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களுக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் அடிமை. எனினும் அப்படங்களில் இருக்கும் ஒரு சில முக சுளிப்பான சம்பவங்களின் காரணமாக அப்படத்தை வெறுப்பவர்களும் உண்டு.

சினிமா படங்களைப் போலவே சீரியலுக்கும் சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை பலரும் அடிமையாகி இருக்கின்றனர். முன்னர் சினிமா படங்களில் மட்டும் தான் நெருக்கமான காட்சி, படுக்கையறை, குளியலறை, முத்தக்காட்சிகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் இவ்வாறான சம்பவங்களை இப்போது திணித்து வருகின்றனர்.

ஹிந்தி தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாது அனைத்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் என்று தொடங்கி படுக்கையறை வரை சென்றுள்ளனர். 

இதே முறையை தற்போது விஜய் டீவியினரும் பின்பற்ற தொடங்கி விட்டார்கள். அதாவது சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சி சேனலின் 'ராஜா ராணி' 2 சீரியலில் ஆதி, ஜெசி முத்தக்காட்சி அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 'சிப்பிக்குள் முத்து' என்ற சீரியலில் ஆகாஷ், வாணியின் குளியளறை காட்சியை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 


தொலைக்காட்சியை குடும்பமாக பார்க்கும் இல்லத்தரசிகள், குழந்தைகள் இதை பார்த்து முகம் சுளிக்கப்படுவதாகவும் இணையத்தில் கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சி டிஆர்பிக்காக இப்படி செய்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுல்லாது நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக இதனை விவாதித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement