தமிழ் சினிமாத் திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினி. மேலும் கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிகளை வாரிக் குவித்து வந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்து வருகின்றார்.
இந்நிலையில் தான் ரஜினியின் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான 'பாபா' திரைப்படமானது தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் அவரே தயாரித்த பாபா திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.
பலத்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ஆனது சில காரணங்களால் தோல்வியை சந்தித்தது. எது எவ்வாறாயினும் பல ரசிகர்களுக்கு பாபா திரைப்படம் விருப்பத்திற்குரிய படமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஆழ்வார்' திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் அஜித் நடிப்பில் செல்லா இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கெனவே படுதோல்வியை சந்தித்தது.
பலத்த எதிர்பார்ப்போடு இருந்த அஜித் ரசிகர்கள் பலரும் இப்படத்தினால் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வந்த தகவலினால் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது சில விஜய் ரசிகர்களும் இந்த தகவலினால் ஆழ்வார் திரைப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். இருப்பினும் இது வெறும் வதந்திதான் என்றும், அஜித்தின் எந்த படமும் ரீ ரிலீஸ் செய்யும் திட்டமில்லை எனவும் ஒரு பக்கம் மறுபக்கம் தகவல் ஒன்று வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!