பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் நேரடியாக மோதுகிறார்கள் என்றதும் மொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.அத்தோடு தியேட்டர்கள் மற்றும் ஷோ ஒதுக்கீடு மாறும் என்பதால் எந்த படத்திற்கு அதிகம் வசூல் கிடைக்கும் என குழப்பம் நீடித்து வந்தது.
அத்தோடு துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்ததால் அந்த படத்திற்கு தான் அதிக ஷோக்கள் முதல் நாளில் கிடைத்தது. அதனால் தமிழ்நாட்டில் துணிவு படம் தான் முதல் நாளில் அதிகம் வசூலித்தது என தகவல் வந்தது.
இவ்வாறுஇருக்கையில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
"பொங்கல் வின்னர்" என குறிப்பிட்டு புது போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார்கள். "கிரவுண்ட்ல எத்தனை பேர் வேணா இருக்கலாம்.. ஆனா ஆடியன்ஸ் ஏ declare பண்ணிட்டாங்க இது வாரிசு பொங்கல்னு" என ட்விட் செய்துஇருக்கின்றனர்.
மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Ground la ethana per vena irukalam.. Aana audience eh declare panitanga idhu #VarisuPongal nu 🔥
THE REAL BOSS 💥#VarisuPongalWinner 😎#Thalapathy @actorvijay Sir @directorvamshi@SVC_official@MusicThaman @iamRashmika @Lyricist_Vivek@Jagadishbliss@TSeries#Varisu pic.twitter.com/XvHkVhRMST
Listen News!