தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் இன்னும் ஒருசில காட்சிகள் மட்டும் தான் எடுக்க வேண்டியுள்ளது. மேலும் இப்படமானது வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார். அதாவது விஜய்க்கு தலைமுடி உதிர்ந்துவிட்டது. அத்தோடு வெள்ளை முடியும் இருக்கின்றது.
விஜய்க்கு வெள்ளை முடி இருந்தாலும் அவரது அப்பா, அம்மாவிற்கு இன்றுவரை இந்த பிரச்சனையில்லை. விஜய்க்கு ஏன் இப்படியென்றால் இரசாயனம் கலந்த சிலவற்றை தலைக்கு போட்டதால் தான் இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வேறுமாதிரியான முடிவை எடுத்து வந்தனர். ஆனால் விஜய் இதற்கு எதிர்மாறாக தலைப்பாகையை மாற்றிமாற்றி வைத்து வந்துள்ளார். அப்படி விஜய் வைக்கும் தலைப்பாகையை அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
இதனால் ஒரே தலைப்பாகையை விஜய் பயன்படுத்துங்கள் என்று பயில்வான் ரங்கநாதன் வேண்டுகோளாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது நான் ஏன் இவ்வாறு அக்கறையுடன் கூறுகின்றேன் என்றால் என் மகனே விஜய் உடைய ரசிகர் தான் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!