தமிழ் திரையுலகில் வாரிசு படத்தின் மூலம் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார் தில் ராஜு. வம்சி இயக்கத்தில் உருவான இப்படமானது இன்றைய தினம் அதிகாலை 4மணிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இப்படத்தின் FDFS காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் தயாரிப்பாளர் தில் ராஜு.படம் பார்த்த பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தில் ராஜுவை பார்த்து அனைவரும் நம்பர் 1 என கத்தினார்கள்.
இதனால் குஷியான தில் ராஜு தன் காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.முன்னதாக வாரிசு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஹீரோ என தில் ராஜு பேசியிருந்தார்.
அவரின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், விஜய் ரசிகர்கள் அவரது பேச்சுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கூட தில் ராஜு பேச வரும்போது ரசிகர்கள் நம்பர் 1 என கத்தி ஆரவாரம் செய்தனர். அப்போது பேசத் தொடங்கும் முன் தில் ராஜுவும் நம்பர் 1 என கத்தியது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Listen News!