விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் குறித்து அடிக்கடி அரசியல் குறித்த தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் எனக் கூறப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிரமாக செய்து வருகிறார்.
அதாவது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல விசயங்களை செய்து அரசியல் பிரவேசத்தை நோக்கி மெதுவாக காய் நகர்த்தி வருகிறார். அதில் ஒரு நிகழ்வாக மாவட்ட வாரியாக முதல் மூன்று இடத்தினை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் விஜய் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினுடைய நிர்வாகியான காளிஸ்வரன் மற்றும் சுபாஷ் என்ற இருவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது திருப்பூர் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே இருவரும் கைதாகியுள்ளனர்.
அந்தவகையில் நாளை ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!