பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் பாக்ஸ்ஆபிஸ் வசூல் பற்றி தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அத்தோடு வாரிசு வசூல் 11 நாளில் 250 கோடி ருபாய் என தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார். ஆனால் துணிவு டீம் மட்டும் வசூலை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் தற்போது இரண்டு படங்களும் கேரளாவும் பெற்ற வசூல் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கேரளாவில் தற்போது வரை வாரிசு படம் 12.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. அத்தோடு அதில் ஷேர் மட்டும் 5.1 கோடி ரூபாய் வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
துணிவு படம் கேரளாவில் மொத்தமாக 4.9 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. மேலும் அதில் 2 கோடி மட்டுமே ஷேர் கிடைத்து இருக்கிறது.
எனினும் இதன் மூலம் துணிவு படத்தை விட இரண்டு மடங்குக்கும் மேலாக வாரிசு பெற்று இருக்கிறது. இருப்பினும் இரண்டு படங்களுமே விநியோகஸ்தருக்கு தற்போது வரை லாபம் தரவில்லை எனவும் கூறப்படுகின்றது.
Listen News!