விஜய்-சங்கீதா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறாக இருபத்தி மூன்று வருடமாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் இருவர் குறித்தும் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பல தகவல்கள் பரவி வருகிறது.
அந்தவகையில் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சங்கீதா தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்த்து வருவதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிலையில் சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இது குறித்த பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது "விஜய்யும் அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக பரவி வரும் தகவலில் துளிக்கூட உண்மை இல்லை எல்லாம் பொய். இவர்கள் சேர்ந்துதான் இருக்கிறார்கள் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள். விஜய் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோ பரப்பிய வதந்தி, விஜய்யும் அவரது மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரிய வாய்ப்பே இல்லை" என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "அதே போல விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இருக்கும் சண்டை சாதாரணமானது தான். ஏதோ கருத்து வேறுபாடால் வந்த பிரிவு தான் இது நாளடைவில் சரியாகிவிடும், இது நிரந்தரமானது இல்லை. நீர் அடித்து நீர் விலகாது விரைவில் இருவரும் சேர்ந்து விடுவார்கள்" என்று பயில்வான் ரங்கநாதன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!