• Sep 20 2024

விஜய் சேதுபதி - சூர்யா இடையே பெரும் பிரச்சனை.. காரணம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் காரணம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் விஜய் சேதுபதி திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மகன் சூர்யா சமீபத்தில் தான் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்றும் ’ஃபீனிக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில்  ’ஃபீனிக்ஸ்’ படத்தின் கேமராமானாக வேல்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென விஜய் சேதுபதி நடிக்கும் ’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்று விட்டதாகவும் இதனால் ’ஃபீனிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் ’விடுதலை 2’ படம் முக்கியம் என்று வேல்ராஜ் கருதியதை அடுத்து ’ஃபீனிக்ஸ்’ படத்திற்கு வேறொரு கேமராமேனை வேல்ராஜ் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் சேதுபதி மகன் சூர்யா அதை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் வேல்ராஜ் வந்தால் தான் படப்பிடிப்பு என்று கறாராக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியும் எவ்வளவு சமாதானம் கூறியும் அவரது மகன் சூர்யா அதைக் கேட்கவில்லை என்றும் இதனால் தந்தை மகன் ஆகிய இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு ’ஃபீனிக்ஸ்’ படத்துக்கு திரும்பி வருகிறேன் என்று வேல்ராஜ் உத்தரவாதம் கொடுத்தவுடன் தான் சூர்யா சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஒப்புக்கொண்ட வேல்ராஜ், திடீரென வெற்றிமாறன் படம் தான் முக்கியம் என்று அவர் எடுத்த முடிவு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement