• Sep 20 2024

அந்த படத்துக்காக சம்பளம் வாங்காமல் நடித்த விஜய் சேதுபதி..! அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல டைரக்டர் சீனுராமசாமியின் தம்பி ஆர்.விஜயகுமார் டைரக்டராகி உள்ளார். இவர் இயக்கும் படத்துக்கு `அழகிய கண்ணே' என்று பெயர் வைத்துள்ளனர். 

இந்தப் படத்தில் கதாநாயகனாக திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடிக்கிறார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். சிங்கமுத்து, ஆண்ட்ரோஸ், சரவண சக்தி ஆகியோரும் நடித்து உள்ளனர்.

படம் பற்றி டைரக்டர் ஆர்.விஜயகுமார் கூறும்போது, ``சீனுராமசாமி இயக்கிய பல படங்களில் உதவி இயக்குநராக இருந்து இப்போது டைரக்டராகி உள்ளேன். மதுரையில் இளம்பெண்ணை காதலிக்கும் இளைஞன் டைரக்டராகும் ஆசையில் சென்னை வருகிறார். பல நடிகர்களுக்கு கதை சொல்கிறான். இந்த சூழலில், எதிர்ப்புக்கு இடையில் காதலியை கலப்பு திருமணம் செய்து கொள்கிறான். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் எழுவதும், இதனால் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் கதை.

இதில் விஜய்சேதுபதி, பிரபு சாலமன் ஆகியோர் கவுரவ தோற்றங்களில் வருகிறார்கள் என்றார். இந்தப்படத்துக்காக விஜய்சேதுபதி சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement