இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் சில படங்கள் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்காகவும் வேறு சில படங்கள் அப்படத்தினுடைய கதைகளுக்காகவும் வெற்றி பெறுவது வழமை. ஆனால் ஒரு சில படங்கள் தான் அப்படங்களினுடைய பிரமாண்டத்திற்காக வெற்றி பெறுகின்றன. அப்படிப்பட்ட படங்களே இயக்குநர் ஷங்கரின் படங்கள்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் படங்கள் இருந்தாலும் அருமையான தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்ற கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். இயக்குநராக அறிமுகமான காலத்திலிருந்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த வண்ணம் இருக்கின்றார்.
இந்தநிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து 'RC 15' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். மேலும் இயக்குநர் ஷங்கர் இந்தப்படத்தை முடித்த கையோடு நீண்ட நாட்களாக இழுபட்டு வந்த உலக நாயகன் கமலஹாசனின் 'இந்தியன் 2' என்ற படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்தப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படத்தினுடைய இயக்குநர் ஷங்கர் மற்றும் கதாநாயகனான கமல் இருவரும் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதற்கான காரணம் யாதெனில் விஜய் சேதுபதி கமலஹாசனுக்கு வில்லனாக 'விக்ரம்' படத்தின் மூலம் நடித்து மிரட்டியதால் அப்படம் பிரமாண்டமான வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் விஜய் சேதுபதியையே நடிக்க வைக்க கமல் ஆசைப்படுகிறார்.
அதேபோன்று சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஷங்கரிடம் "முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, அஜித் இவர்களுள் கண்டிப்பாக உங்களுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்றால் உங்களுடைய முதல் தேர்வு யாராக இருக்கும் "என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் ஷங்கர் "விஜய் சேதுபதி தான் என்னுடைய முதல் தேர்வாக இருக்கும்" என வெளிப்படையாக அப்பேட்டியில் கூறி இருக்கின்றார். விஜய் சேதுபதியை போன்று விக்ரம் படத்தில் சூர்யாவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துப் பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கின்றார். அதேபோல தல அஜித் 'மங்காத்தா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரியளவிலான வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக இருக்கும் போது அஜித், சூர்யாவை தேர்வு செய்யாமல் விஜய் சேதுபதியை ஷங்கர் தேர்ந்தெடுத்துக் கூறியிருப்பது 'இந்தியன் 2' படத்தில் அவர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பது தான் ரசிகர்களிடம் அதிகளவான வரவேற்பு பெறுகிறது என்பதை உணர்ந்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவரை வில்லனாகவே முத்திரை குத்தி அடுத்தடுத்த படங்களிலும் வில்லனாகவே நடிக்க வற்புறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் கிங் கான் ஷாருக்கான்-அட்லி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'ஜவான்' என்ற திரைப்படம் மற்றும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அத்தோடு 'தேவர்மகன் 2' படத்திலும் விஜய் சேதுபதி கமலுக்கு மீண்டும் வில்லனாக நடிக்க வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறாக அடுத்தடுத்து கமலின் படங்களில் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளத்துள்ளது.
பிற செய்திகள்
- பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த கார்த்தி படப் பாடல்…எது தெரியுமா?
- ‘கோப்ரா’ படத்தின் பாடல் லிஸ்ட் வெளியீடு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- மணிரத்னம் வேட்டி அணிந்து வர வேணாம் என்றாரா?..புதுப் புரளியை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்
- வடிவேலு படத்தின் முதலாவது சிங்கிள் வெளியீடு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- ‘அசுரன்’ படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இயக்குநர் வெற்றிமாறன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!