90களில் பிரபல்யமான நடிகராக இருந்த பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் ‘அந்தகன்’.இந்தப்படத்திதை இவருடைய அப்பாவும் நடிகருமான இயக்குநர் தியாகராஜன் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சமுத்திரகனி, ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் இன்னும் படப்பிடிப்பு எடுக்கப்படவுள்ளது.இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளதாகவும் . 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடலுக்காக பிரம்மாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளரான அனிரூத் மற்றும் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விரைவில் ‘அந்தகன்’ ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!