விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் மிகவும் பிரமாண்டமாக வெளியானது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பிளாக்பஸ்டராகிவிட்டதாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியது பற்றி தற்போது பேசப்பட்டு வருகின்றது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக நடித்த படம் நானும் ரௌடி தான். அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் நானும் ரௌடி தான் கதையை விக்னேஷ் சிவன் கூறியபோது நான் தூங்கிவிட்டேன் என பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். முதல் முறை கதை சொன்னபோது அதில் சுவாரஸ்யமே இல்லையாம். அதன் பிறகே கதையில் திருத்தம் செய்து விஜய் சேதுபதியை இம்பிரஸ் செய்தாராம் விக்னேஷ் சிவன்.
இவ்வாறுஇருக்கையில் விஜய் சேதுபதி தூங்கியதை கேட்டதும் நம்ம குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் குமார் கதை பிடிக்காமல் தூங்கியது பலருக்கம் நினைவுக்கு வந்துவிட்டது.
Listen News!