கதாநாயகனாக மட்டும் நடிக்காது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார் நடிகர் விஜய் சேதுபாதி.
தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.இவ்வாறு இருக்கையில் விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் படங்கள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் சேதுபதி தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டில் களமிறங்க இருக்கிறார்.
அதாவது அவர் அட்லீயின் ஜவான் படத்தில் அடுத்து வில்லனாக நடிக்கிறார்.தற்போது ஜவான் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.
அட்லீ இயக்கும் படம் இது என்பதால் இதில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. விரைவில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியும் ஷாரு காணும் பங்கேற்கும் காட்சிகள் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகின்றது.
தற்போது விஜய் சேதுபதி ஜவான் படத்திற்காக வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்திருக்கிறது. அவர் 21 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார் என்றும், அவரது கெரியரில் இதுதான் அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அத்தோடு ல முன்னணி நடிகர்களை விட விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் அதிகம் தான் என்பது குறிப்பிடப்பதக்கது. விஜய் சேதுபதி விக்ரம் படத்திற்கு பிறகு தான் தற்போது சம்பளத்தை அதிகரித்து 21 கோடி பெறுகிறார்.
Listen News!