தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் நடிப்பிலும் சரி, குணத்திலும் சரி மிகவும் வித்தியாசமான நடிகராகவும், தன்னலம் இல்லாத அன்பான மனிதராகவும் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. நடித்த நான்கு படங்கள் ஹிட்டாகி விட்டாலே "ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் மற்ற ரோல்களில் நடிக்க மாட்டேன்" என்று வெட்டி பந்தா காட்டிக் கொண்டு திரியும் நடிகர்கள் மத்தியில் இவர் தனித்து நிற்கின்றார்.
அதற்கு காரணம் என்னவெனில் இவர் ஒரு ஹீரோவாக இருந்தும் தொடர்ந்து வில்லன், சிறப்பு தோற்றம் என கலவையான ரோல்களை கூட தன் மனதுக்கு பிடித்தது போல் தேர்வு செய்து வருவது மட்டுமல்லாமல் தான் மற்றவர்களுடன் பழகிய பழக்கத்திற்காகவும், நட்பிற்காகவும் நடித்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும் சரி, த்ரில்லர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'விக்ரம்' படமும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்று மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருந்தன. அதுமட்டுமன்றி 'மாமனிதன்' திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் விஜய் சேதுபதி தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. அதாவது இது தொடர்பாக அவர் கூறுகையில் "நான் ஜானு என்கிற பெண் பின்னாடி சுமார் 4 வருடங்கள் சுற்றினேன். ஆனால் அந்தப் பெண்ணுக்கு கடைசி வரை அது தெரியாது. இப்போது கூட அது தெரியாமல் இருக்கலாம். அதன் பின் பல நாட்கள் அவரை நான் பார்க்கவே இல்லை.
என் திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் என் தந்தையுடன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண் மாதிரி ஒரு பெண் நடந்து போனாங்க. நான் வண்டியை திருப்பினேன் என் தந்தை ஏன்டா வண்டியை திருப்புகிறாய் என்று கேட்டாரு. அதற்கு நான் நான்கு வருடமாக சைட் அடிச்ச பொண்ணு போகுதுன்னு நினைக்கிறேன். பாத்துட்டு போயிடலாம்னு சொன்னேன். எனினும் அதன் பின் திரும்பி அவங்கள பார்க்க முடியவில்லை" எனக் கூறியிருக்கின்றார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த '96' திரைப்படம் ஆனது வெளியாகி பலரது பள்ளி பருவ நினைவுகள் மற்றும் காதல் போன்றவற்றை நினைவுபடுத்தி இருந்தது. இந்த நிலையில் இப்படத்தை போலவே இதில் நடித்த விஜய் சேதுபதியின் வாழ்க்கையிலும் ரியலாகவே ஜானு என்கிற ஒரு பெண் இருப்பதை அவரே தனது வாயினால் கூறி இருக்கின்றார். இவ்விடயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் யாருக்கு தான் காதல் நினைவு இல்லாமல் இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்
- “நானே ஷாக்கிங்ல தான் இருக்கேன்”…ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள பானுப்ரியாவின் சகோதரி…அவரே கூறிய சுவாரஷியமான தகவல்…!
- மைனா நந்தினியின் குறும்புத்தனமான நடனம்…அவரே வெளியிட்ட பதிவு..!
- 34 வயதிலும் வெறித்தனமாக ஜெனிலியா செய்து வரும் விஷயம்…வைரலாகும் வீடியோ..!
- வெளியான ‘தி லெஜண்ட்’ படம்…விடுமுறை அளித்த தமிழக அரசு…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்.!
- இளஞ்சிங்கம் போன்று காட்சியளிக்கும் கார்த்தி…அழகில் அண்ணனை மிஞ்சி விட்டாரே…வெளியான புகைப்படம் ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!