நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது.
அதுமமட்டுமல்லாது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மேற்கொள்ளப்படுகின்ற திடீர் சந்திப்பு, மற்றும் அந்த இயக்கத்தின் வாயிலாக செய்யப்படுகின்ற பணிகள் அனைத்துமே அரசியல் பயணத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் புதிய செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது யூடியூப் சேனல் மூலம் விஜய் மக்கள் இயக்க நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்கவுள்ளதாக அந்தத் தகவல் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்தத் தகவலை விஜய் தரப்பு மறுத்துள்ளது. அந்தவகையில் இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனக் கூறி விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!