வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் உருவாக்கி வருகின்றது.
இந்தத் திரைப்படம் குறித்து தினமும் பல அப்டேட்களை தெரிவித்து வருகிறோம். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதனையடுத்து இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்தோடு மிஷ்கின், சஞ்சய்தத் இருவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது லியோ படம் குறித்த மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகின்றது. அதில் ஒரு விஜய்க்கு திரிஷா ஜோடியாகவும், இன்னொரு விஜய்க்கு பிரியா ஆனந்த் ஜோடியாகவும் நடிக்கின்றனர் என்றும் பேசுகின்றனர். அத்தோடு இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!