தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஒருவர் என்றால் அது நடிகர் விஜய் தான். இவருக்குத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உள்ளனர். வருடந்தோறும் இவரின் படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளமோ ஏராளம்.
அந்தவகையில் இவரின் நடிப்பில் கடந்த வருடம் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படமானது எதிர்ப்பார்த்த அளவிற்குப் பெரியளவில் வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் விஜய் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.
இப்படமானது தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் வாரிக் குவித்து வரும் நிலையில் பல முக்கிய இடங்களில் வசூலில் சொதப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும். அந்தவகையில் மலையாளம், தெலுங்கு மற்றும் சில வெளிநாடுகளிலும் வாரிசு படத்தினுடைய வசூலானது குறைந்து படு தோல்வியை தழுவியுள்ளது.
உதாரணத்திற்கு விஜய்யின் வசூல் கோட்டை என்று கூறப்படும் கேரளாவில் கூட வாரிசு படம் படுதோல்வியையே அடைந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் வாரிசு படம் ரூ. 300 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் மீண்டும் தில் ராஜுவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தையும் வாரிசு இயக்குநர் வம்சி தான் இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் 'தளபதி 68' படத்தில் ஏற்கனவே அட்லீ இயக்க கமிட்டாகியுள்ளார் என்பதினால், 'தளபதி 69' படத்தை வம்சி இயக்குவார் எனவும், தில் ராஜு தாயாரிப்பார் தெரிவிக்கின்றனர். மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதால் தளபதி ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
Listen News!