தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடிய தொகுப்பாளர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கென்று தனி மரியாதையும் அந்தஸ்தும் காணப்படுகின்றது.
அந்த வகையில் விஜய் டிவிய் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் ப்ரியங்கா. இவர் ஸ்டார் மியூசிக் ,சூப்பர் சிங்கர் ,தி வோல், கிங்ஸ் ஒஃவ் காமெடி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கின்றார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இது தவிர பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் மீண்டும் தொகுப்பாளராக இணைந்து கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் இவர் சின்னத்திரையில் நுழைந்து 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் சீசன் 5 பிரபலங்கள் அனைவரும் ஒன்றினைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ப்ரியங்காவுடன் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர்.
இது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.அதில் ப்ரியங்கா சந்தோஷம் தாங்க முடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்ததையும் காணலாம்.
Listen News!