வெள்ளித்திரைக்கு ஏற்றாற் போல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகளும் ரசிகர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா எனும் சீரியலில் சித்துவாக நடிப்பவர் தான் அர்னாவ்.
இவருக்கு இந்த சீரியல் மூலம் பெரும் வரவேற்ப்பு பெற்றாலும் இது முதல் சீரியல் அல்ல.இதற்கு முதலில் இருந்தே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
அர்னாவ் அல்லது அம்ஜத் கான் என்று அழைக்கப்படும் இவர் 2014ஆம் ஆண்டிலிருந்து சக்தி (2014-2015), கேளடி கண்மணி (2015-2017) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்.
இந்நிலையில் இவரின் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியாகி உள்ளது.அதாவது இவருக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகும் நடிகை திவ்யாவுடன் திருமணம் நடந்துள்ளது.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!