• Sep 20 2024

விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வந்தது- கடைசி நாளில் இவரும் உள்ளாரா..வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் டாப் ஹிட் லிஸ்டில் ஓடும் தொடர்களும் உள்ளது, சாதாரணமாக மக்களிடம் வரவேற்பு பெற்ற சீரியலும் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

அப்படி மாலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்.

மேலும் மார்ச் 26, 2018 இந்த தொடர் தொடங்கி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

1040 எபிசோடுகள் ஓடியிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வர இருக்கிறது, கடந்த சில நாட்களாக சீரியல் முடியப்போகிறது என்ற செய்தி வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அந்த கொண்டாட்டத்தில் கத்தி வேடத்தில் நடித்த ராஜு ஜெயமோகன், மகா கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா ஆகியோரும் இறுதிநாள் படப்பிடிப்பு செட்டில் உள்ளனர்.அவர்கள் எல்லோரும் சேரந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement