தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளைச் சந்தித்தாலும் யாராலும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் ரஜினிகாந்த்.பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் அண்மையில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணாக்கர்களுக்கு கல்வி விருது வழங்கினார்.
சுமார் 10 மணி நேரம் வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சி மாணவர்கள் மீதான அக்கறையில் நடக்கவில்லை, இது விஜய்யின் அரசியல் ஆசை என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.மேலும் வாக்களிப்பது பற்றியும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியதை பற்றியும் பல விவாதங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பது போல தான் தெரிகிறது . ஆனால் அதிமுக, திமுக இவர்களை தாண்டி விஜயால் ஜெயிக்க முடியாது, ஆனால் அவர்களின் ஓட்டுக்களை வேண்டுமென்றால் பிரிக்க முடியுமே தவிர அவர்களை நெருங்க முடியாது என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தன் ரசிகர்களை மட்டுமே அரசியலில் வரவேண்டும் என்று விஜய் நினைத்திருந்தால் அது தவறு. அதையும் தாண்டி மக்களிடம் நன்கு கனெக்ட் ஆகவேண்டும், கேப்டன் , எம்ஜிஆர் எல்லாம் எப்படி இருந்தார்கள்? நேரிடையாகவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே மக்களிடம் உள்ள பிரச்சினைகளை தானாகவே போய் கேட்டு அறிவார்கள் என்றும் கூறினார்.
பாக சக நடிகரிடமே கனெக்ட் ஆகாத விஜய் மக்களிடம் எப்படி கனெக்ட் ஆவார், மேலும் மேடைகளில் ஓங்கி பேச வேண்டும், சரமாரியாக கேள்விக் கனைகளை தொடுக்க வேண்டும் . ஆனால் விஜய்க்கு இந்த திறமை எல்லாம் கிடையாது என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.மேலும் விஜயின் விக்-ஐ பற்றி கேட்டதற்கு மீசை ராஜேந்திரன் ஆவேசமாக ஒரு மனிதனின் விக்கை பற்றி எல்லாம் பேசக்கூடாது, அது மிகப்பெரிய தவறு, தலையில் சரக்கு இருக்கானு தான் பார்க்க வேண்டும், விஜய்க்கு சரக்கு அதிகமாக இருந்ததனால்தான் இந்த அளவு வளர்ச்சியை அடைய முடிந்தது என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.
Listen News!