• Sep 21 2024

சூப்பர் ஸ்டார் பட்டத்தை வாங்க காசு கொடுத்த விஜய்... உண்மையைப் போட்டுடைத்த முக்கிய நபர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டில் 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இவர் தற்போது தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். அதுமட்டுமல்லாது ரஜினி - கமல் தலைமுறைக்கு அடுத்தபடியாக மிக வெற்றிகரமான நடிகராகவும் உருவெடுத்திருக்கிறார் விஜய்.


இந்நிலையில் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல நடிகர்களின் உடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு போட்டியாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் கூட இது பேசுபொருளாக மாறி இருக்கின்றது.


மேலும் சமீபத்தில் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி இருந்தமையும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்குப் பலர் ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்களை கூறி வந்திருந்தனர். 


இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான சமீதா ஜோசப் என்பவர் கூறிய விடயமானது தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. அதாவது விஜய் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்காக ஒரு பத்திரிக்கையில் காசு கொடுத்து சர்வே நடத்த தூண்டிவிட்டு, அதில் தன்னுடைய பெயரினை சூப்பர் ஸ்டார் எனக் கூறி வெளியிட சொல்லியதாகவும் அவர் கூறியுள்ளார். 


இவ்வாறு சூப்பர் ஸ்டார் படத்திற்காக முன்பு விஜய் காசு கொடுத்திருந்தார் எனக் கூறுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எது எவ்வாறாயினும் இப்படி விஜய் நடந்து கொண்டதை சமீதா ஜோசப் பல ஆண்டுகளுக்கு பிறகு போட்டுடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement