• Sep 20 2024

முத்தங்களை அள்ளி தெறிக்கவிட்ட விஜய்.. எல்லா மலையாளிகளுக்கும் நன்றி! எமோஷனலான விஜய்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

'கோட்' படத்தில் ரெட்டை வேடத்தில் நடித்து வரும் விஜய், தற்போது கேரளாவில் தனது படப்பிடிப்புக்களை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பெரும் பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட  உள்ளதாகவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவுக்கு சென்ற விஜய்க்கு ரசிகர்களால் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.


கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் கேரளாவுக்கு வரவுள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்தே, விஜயை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் குதூகளித்து வந்தார்கள். அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரது காரை சுற்றி ஏராளமானார் சூழ்ந்து கொண்டார்கள். இதன் காரணமாக அந்த காரும் கடும் சேதம் அடைந்தது.


இதைத்தொடர்ந்து கேரளாவில் விஜய் செய்த சின்ன சின்ன விடயங்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது கேரளா ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றையும், அவர் பேசிய வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement