தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர் தான் யேசுதாஸ். இவரது காந்தக் குரலில் வெளியாகிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது.தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல பாடல்களைப் பாடி இருக்கின்றார்.
இவருடைய மகனான விஜய் யேசுதாஸும் சிறந்த பாடகராக வலம் வருகின்றார்.இவர் 2015 -ம் ஆண்டு வெளியான 'மாரி' படத்தில் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டு பெற்றார். இதையடுத்து விஜய் யேசுதாஸ் "படைவீரன்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தற்போது இவர் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 10 ம் வகுப்பு படிக்கும் சின்மயி நாயர் என்ற மாணவி தான் இயக்குகிறார்.சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள விஜய் யேசுதாஸ், தற்போது மாஸான கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’அவரா இது?’ என்று வியந்துள்ளனர்.இந்தப்புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!