விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
இந்த சீரியலில் ரோகினிக்கும் மனோஜிற்கும் அண்மையில் தான் திருணம் முடிந்தது.அத்தோடு ரோகினி வீட்டுக்கு வந்தத்தில் இருந்து விஜயா ரோகினியை தன்னுடைய மருமகள் என்று பாசமாக நடத்தி வருகின்றார். ஆனால் மீனாவை கொடுமைப்படுத்தி வருகின்றார்.
டியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜயா உங்க அப்பா என் குடும்பத்தின் நிலமை தெரிந்து தான் ரெயினில் வந்து விழுந்திருக்கிறார் என்று சொல்ல மீனா அவர் இருந்திருந்தால் இந்த நலமை வந்திருக்காது என்று சொல்ல, விஜயா கிழிச்சிருப்பாரு, இருக்கிறதென்றால் ஒழுங்கா இரு என்று சொல்கின்றார்.
இதனால் கோபமான மீனா தன்னுடைய அம்மா தடுக்கவும் நேரடியாக கோயில் சென்று தலையில் தண்ணீர் ஊற்றி விட்டு கீழே உருளுகின்றார். இதனால் முத்து வந்து மீனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் விஜயாவைக் கேட்கின்றார். அவளை நீங்க மட்டும் தான் திட்டுவீங்க. இவளை பற்றி தப்பா ஏதும் சொன்னீங்க நடக்கிறதே வேற என்று சொல்ல விஜயா யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!