தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டங்ககளில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருகின்றன. வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதோடு இவரது பஞ்ச் டயலொக் எல்லாம் மிகவும் பிரபல்யமானவை.
நடிப்பைத் தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக சில காலத்திலேயே நடிப்பதை விட்டு விட்டு முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் குறித்த சுவாரஸியமான பல விடங்களை பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.
• Paavam Avara Vituduga Pls 😥 pic.twitter.com/pL5tkC9P53
மேலும் சில காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததோடு இவரது கால்களில் இருந்து விரல்களும் அண்மையில் நீக்கப்பட்டன.தற்பொழுது வீட்டில் முழு நேர ஓய்வில் இருந்து வருகின்றார்.மேலும் அவர் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் பரவின. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில் சுந்திர தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் அவரின் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தேசிய கொடியை ஏற்ற வந்துள்ளார். அங்கு அவர் அமர்ந்தபடியே கொடியை ஏற்றியிருக்கிறார்.மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தவறிய தனது முக கண்ணாடியை மாட்ட கூட இயலாத அளவு காணப்பட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ டுவிட்டரில் பரவி வருகிறது, அதற்கு ரசிகர்கள பலரும் அவரின் முடியாத நிலையை கண்டு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இயக்குநர் ஜான் மகேந்திரன் “மனதிற்கு கஷ்டமாக உள்ளது...இப்படி இவரை துன்புறுத்தி, அரசியல் செய்ய வேண்டுமா...அவரை இளைப்பாற விடுங்கள்...” என பதிவிட்டு இருக்கிறார்.
Listen News!