• Sep 21 2024

எலும்பும் தோலுமாய் மாறிய விஜயகாந்த்... இவருக்கா இந்த நிலை... கண்ணீர் விட்டுக் கதறி அழும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 1980 மற்றும் 90, 2000களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்துள்ள இவர் நூறுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் 100-ஆவது படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்கு பிறகே கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.


சினிமாவைத் தாண்டி அரசியல் அடியெடுத்து வைத்த விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த விஜயகாந்த் தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருந்தார். 

இவ்வாறாக சினிமா, அரசியல் எனப் படு பிஸியாக இருந்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்.


அதுமட்டுமல்லாது கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு காலில் இருந்த விரல்கள் திடீரென அகற்றப்பட்டன.

அத்தோடு சுதந்திர தினத்தில் தனது அலுவலகத்தில் கொடியேற்ற வந்த விஜயகாந்த் கொடி கயிறை பிடித்து இழுக்க முடியாமலும், நிமிர்ந்து கூட பார்க்க முடியாமலும், தனது கண்ணாடியை கூட போட முடியாமலும் ரொம்பவே சிரமப்பட்டார். அவரது நிலையை பார்த்த அவரது தொண்டர்களும் மற்றும் ரசிகர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் தற்போதைய போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. அதாவது விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் நேற்று முன்தினம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். 


அப்புகைப்படங்களில் விஜயகாந்த் மிகவும் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் உள்ளார். விஜயகாந்தின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கண் கலங்கி வருகின்றனர். அத்தோடு இல்லாதவர்களுக்கு வாரி வாரி அள்ளிக்கொடுத்த விஜயகாந்துக்கா இந்த நிலைமை என்றும் கவலையோடு கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement