• Sep 20 2024

சென்னைத் தீவுத் திடலுக்கு மாற்றப்படும் விஜயகாந்தின் உடல்- இது தான் காரணமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

வாட்டசாட்டமாக கம்பீரமாக காட்சியளித்த கேப்டன் விஜயகாந்த், சமீபகாலமாக சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தது காண்போர் நெஞ்சை கலங்க செய்தது.

இந்த நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மக்களின் பார்வைக்காவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.


மேலும் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோமே என்றும் கதறிக்கொண்டிருக்கின்றனர்.இவரின் பூத உடல் நாளைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இந்த நிலையில் இவரின் உடல் நாளைய தினம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் நாளைய தினம் காலை 6மணிக்கு தான் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் மதியம் 1 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement