• Sep 20 2024

திடீரென அடித்து மோசமாக தாக்கினார்... காதலர் குறித்து உண்மைகளை உடைத்த விஜயகாந்த் பட நடிகை!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டெல்லி ஷ்ரத்தா படுகொலை போல் தனக்கும் தனது காதலரால் நேர்ந்திருக்கும் என பிரபல நடிகையான ஃபுளோரா சயினி கூறியிருப்பது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஃபுளோரா சயினி. தெலுங்கு சினிமாவின் மூலம்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். சண்டிகரை பூர்விகமாக கொண்ட ஃபுளோரா சயினி அதன்பிறகுதான் இந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஃபுளோரா சயினி, தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா படத்தின் மூலம் அறிமுகமானார்.



அத்தோடு சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது முழுக்க முழுக்க இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ஃபுளோரா சயினி, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.அத்தோடு  அவரது நடிப்பில் வெளியனா கந்தி பாத் வெப் சீரிஸ் பெரும் பிரபலமானது.



சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ஃபுளோரா சயினி. மேலும் அதில் தனது முன்னாள் காதலனால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவர் அனுபவித்த சித்ரவதைகள் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது தனக்கு அறிமுகமான ஆரம்பத்தில் தனது காதலர் தனக்கு மிகவும் இனிமையாக இருந்ததாகவிம் ரொம்பவே நல்லவராக இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அவரை நல்ல பையன் என தானும் தனது பெற்றோரும் நம்பி ஏமாந்ததாக கூறியுள்ளார்.



அத்தோடு டெல்லியில் காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவும் அப்படிதான் தனது காதலனை நம்பி சென்றார், அவர் விஷயத்தில் நடந்ததுதான் தனக்கும் நடந்தது என்று கூறியுள்ளார் ஃபுளோரா சயினி. முதல் வேலையாக தனது காதலராக இருந்தவர், தன்னை தனது பெற்றோரிடம் இருந்து பிரித்ததாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சை கேட்டு தனது பெற்றோரை விட்டு தான் பிரிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.



ஆனால் அவருடன் சென்ற ஒரு வாரத்திலேயே தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் வேதனைப்பட்டுள்ளார். திடீர் திடீரென்று காரணமே இல்லாமல் அவர் தன்னை அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு தன்னை எதற்காக அடிக்கிறார் என்று தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் ஒரு நாள் இரவு தன்னை அடித்து உதைத்ததில் தனது தாடை உடைந்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகை ஃபுளோரா சயினி.



 அன்றிரவே தன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் அப்போது அங்கிருந்து தப்பித்து ஓட வேண்டுமென்றுதான் தனக்கு தோன்றியதாகவும் தெரிவித்தார். தனது உடம்பில் ஆடை இருக்கிறதா? தன்னிடம் காசு இருக்கிறதா என்றெல்லாம் தான் யோசிக்க வில்லை என்றும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இரவு நேரத்தில் வீட்டிற்கு ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.



இனிமேல் தனக்கு அந்த காதல் வேண்டாம் என முடிவு செய்து, ஒருவழியாக தனது காதலனுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். தனது காதலனுடன் தான் சேர்ந்திருந்தால் டெல்லி ஷ்ரத்தா வாக்கருக்கு நடந்தது தான் தனக்கும் நடந்திருக்கும் என்றும் மிரட்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை ஃபுளோரா சயினி. ஃபுளோரா சயினி தனது காதலர் குறித்து கூறியிருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement