• Sep 20 2024

பிரதமர் மோடியால் திருமணத்தை தள்ளிப்போடும் விஜயகாந்த் மகன்-நிச்சயதார்த்தம் முடிந்து 3வருடமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார்.தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள்போன்ற திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கினார்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து தேமுதிக எனும் கட்சியைத் தொடங்கினார். சினிமாவைப் போல் அரசியலிலும் அசுர வளர்ச்சி கண்ட விஜயகாந்த், குறுகிய காலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.

இதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சினிமாவிலும், அரசியலிலும் இருந்து விலகியே இருந்து வருகிறார் விஜயகாந்த். இதனால் இவரது மனைவி பிரேமலதா கட்சியை கவனித்து வருகிறார். நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் என இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்.

மேலும் இதில் மூத்த மகனான விஜய் பிரபாகரன், பேட்மிண்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி நாய்கள் மீது பிரியம் கொண்ட இவர், பல வகையான நாய்களை வளர்த்து அதனை வைத்து பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். எனினும் சமீபகாலமாக இவர் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இவ்வாறுஇரக்கயைில் இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டே கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோவன் என்பவரின் மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் இவருக்கு இதுவரை நடைபெற வில்லை. இவர்களது திருமணம் தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடி தான் காரணமாம். பிரதமர் மோடி தலைமையில் தான் தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென விஜயகாந்த் ஆசைப்படுகிறாராம்.

அத்தோடு அவரிடம் தேதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறதாம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் செய்து வருகிறார்களாம். மறுபுறம் தனது தம்பி சண்முகப்பாண்டியனைப் போல் சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறாராம் விஜய பிரபாகர். சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார் விஜய் பிரபாகர், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement