'கேப்டன்' என அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர். விஜயகாந்த்தும், கதாசிரியர் இப்ராகிம் ராவுத்தரும் மதுரையில் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.
அந்தவகையில் விஜயகாந்த்துக்காக பலரிடமும் போய் நடிக்க வாய்ப்பு கேட்டு அவரின் வளர்ச்சியை பார்த்து பார்த்து மகிழ்ந்தவர் ராவுத்தர். இவர்களது நட்பை பார்த்து திரையுலமே ஆச்சரியப்படும் அளவுக்கு பல ஆண்டுகாலம் பிரிந்து இருந்தது. மேலும் ராவுத்தர் பேச்சை விஜயகாந்த் தட்ட மாட்டார், விஜயகாந்த் பேச்சை ராவுத்தர் தட்ட மாட்டார் என இருவரும் நட்பிற்கு சிறந்த இலக்கணமாக திகழ்ந்து வந்தனர்.
ஆனால் விஜயகாந்த்துக்கு திருமணமான பின்னர் படிப்படியாக ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டதாகவும், இருவரின் பிரிவுக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் காரணம் என்றும், கடைசி காலத்தில் ராவுத்தரை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார் அந்த குற்ற உணர்ச்சிதான், இன்றைய விஜயகாந்த்தின் மோசமான உடல்நிலைக்கு காரணம் என்ற பேச்சுக்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் எழுந்தன.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பிரபலம் ஒருவர் கூறுகையில் "விஜயகாந்தின் மோசமான உடல்நிலைக்கு காரணம் அவருடைய முந்தைய பழக்கவழக்கங்கள் தான். இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். விஜய்காந்தின் வளர்ச்சிக்கு ராவுத்தருக்கு பெரிய பங்கு உண்டு. ஆனால், விஜய்காந்திற்கு திருமணம் ஆன பிறகு நிலைமை அப்படியே மாறிவிட்டது. அனைத்தும் பிரேமலதாவின் கன்ட்ரோலில் சென்றுவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "திருமணத்திற்கு முன்பு வரை, படத்திற்கு டேட் பார்த்தது, சம்பளம் பேசியது எல்லாமே ராவுத்தர் தான். அந்த பணத்தை எல்லாம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற முடிவைக்கூட ராவுத்தர் தான் எடுப்பார். திருமணத்திற்கு பின், ராவுத்தரை முறையாக அழைத்து அவருக்கு சேரவேண்டிய சொத்துக்களை எல்லாம் பிரித்து கொடுக்கப்பட்டது. ராவுத்தரை ஏமாற்றி அனுப்பிவிடவில்லை, அவருக்கு சேரவேண்டிய பல கோடி சொத்துக்களை கொடுத்துத்தான் அனுப்பிவைத்தார்" எனவும் அவர் கூறியுள்ளார்.
Listen News!