தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக வல் வந்தவர் தான் விஜயகாந்த். இவர். 1979 ம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லன் ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல திரைப்டங்களில் நடித்திருந்தாலும் இடி முழக்கம் என்னும் திரைப்படம் தான் இவரை சிறந்த நடிகர் என்று அறிமுகப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரஜினி கமல் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.
சினிமாவை தாண்டி மக்கள் பணி ஆற்றுவதற்காக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.அந்த வகையில் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சியில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தார்.
தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டி வந்ததால் சினிமாவிலிருந்து விலகினார்.இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு வழக்கமான பரிசோதனைக்கு பிறகு ஆபரேஷன் மூலம் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் என வாழ்த்து பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இயக்குநர் நெல்சனின் மகனை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- எப்போது திருமணம்..? நடிகை அபர்ணாவின் தீயாய் பரவும் பதில்..!
- நயனின் ஹனிமூனின் புகைப்படத்தை யார் முதலில் லைக் போட்டது தெரியுமா..? அட இவரா..!
- அட இது நம்ம அப்பாஸா…வீட்டில் என்ன செய்கிறார் தெரியுமா..வைரலாகும் வீடியோ..!
- மாயமாகிய இன்ஸ்டா கணக்கு….அதிர்ச்சியில் பிரபல நடிகை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!