• Sep 21 2024

மத ரீதியான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய்யின் தந்தை; என்ன செய்தார் தெரியுமா?

tech / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்யின் தந்தை என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே.

சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பிறந்தநாள் இடம்பெற்று இருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வந்தன. எனினும் நடிகர் விஜய் அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு விஜய் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு கூட வராதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாது அவர் மேல் கோபமும் கொண்டிருந்தனர்.

அதாவது சமீபத்தில் சந்திரசேகர் மற்றும் விஜய் இற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதாவது தனது மகனான விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏசி கட்சி தொடங்கியது விஜய்க்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சில காலமாக மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது. இந்த மனஸ்தாபத்தின் காரணமாக விஜய் தனது தந்தையுடன் பேசுவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் இவர் மேல் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் விஜய்யின் தந்தை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்திருந்தாலும் விஜய்யின் அம்மா ஷோபனா இந்து மதத்தைச் சார்ந்தவர். இவர்கள் இருவரும் மதம் பற்றிய எந்த விதமான சிந்தனையும் இல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் விஜய்யிற்கு அவரது பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் ஜோசப் விஜய். இதன் காரணமாக நடிகர் விஜய் தனது படத்தில் கிறிஸ்தவ மதத்தை பற்றி சித்தரிப்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது.

ஆனால் விஜய்யின் தந்தையோ அவ்வாறு அல்ல. அவ்வப்போது எஸ்.ஏ.சி தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று வருவார். இந்தநிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தை தனது 80 வயது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகி ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் எஸ்.ஏ.சி சந்திரசேகர் மற்றும் ஷோபனா இருவரும் தங்களது மகன் நடிகர் விஜய் பெயரிலும் கோயிலில் அர்ச்சனை செய்து வழிபாடு நடாத்தி இருந்தனர்.

இதை அறிந்த ரசிகர்கள் விஜய்யின் ரசிகர்கள் மகனுக்கு தந்தை மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் பெற்றோர்களாக எஸ்.ஏ.சி சந்திரசேகர் மற்றும் ஷோபனா இருவரும் அவர்களது கடமையை செய்து வருகிறார்கள் என பாராட்டி வருகின்றனர். மேலும் இனிமேல் ரசிகர்கள் மதத்தை வைத்து எக்காரணத்தை கொண்டும் விஜய்யை யாரும் விமர்சிக்கக் கூடாது எனவும் கூறிவருகின்றனர்.

Advertisement

Advertisement