• Sep 20 2024

விஜய்யின் மாஃபியா கும்பல்.. தந்தை எஸ்.ஏ.சி வருத்தம்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக   இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய் குறித்தும் அவர் சுற்றி நடக்கும் சில விஷயங்கள் குறித்து அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஷாக்கிங் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


" ஒரு ஆன்லைன் குரூப் ஒன்றை உருவாக்கி கொண்டு, அந்த குரூப்பில் விஜய்யும் உள்ளார். மேலும் இந்த குரூப்பில் ஒரு விஷயத்தை அவர்களே கிரியேட் செய்கிறார்கள். உதாரணமாக கூறவேண்டும் என்றால், எஸ்.ஏ.சி நேற்று ஒரு இடத்தில் தவறாக பேசிவிட்டார்.

விஜய்யை டேமேஜ் பண்ணிட்டாரு, அப்படினு ஒரு தவறான பதிவை கிரியேட் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால், அந்த விஷயம் நடந்திருக்காது. மேலும் இந்த பதிவை ஒரு குறிப்பிட்ட 100 பேர்களை வைத்து திரும்ப திரும்ப ஷேர் செய்கிறார்கள்.


இதெல்லாம் விஜய் பார்த்துக்கொண்டு உள்ளார். ஒரு பொய் 10 முறை சொன்னாலே உண்மை ஆகிவிடும். இவர்கள் 50 முறை 100 முறை சொல்கிறார்கள், அப்போது என்னவாகும் ' என்று பேசியுள்ளார்.

Advertisement

Advertisement